இடப்பற்றாக்குறையால் சிரமப்படும் மாணவர்கள்

Update: 2022-08-12 14:21 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் உட்பட்ட மீன்சுருட்டி பகுதியில் ஒரு அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளது. இந்த அரசு விடுதி சுமார் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். இந்தக் கட்டிடம் தற்போது சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது இங்கு இயங்கி வந்த மாணவர்கள் விடுதி அருகில் உள்ள ஒரு வீட்டில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. கடந்த 15 மாதங்களாக மாணவர்கள் ஆதிதிராவிடர் விடுதி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நிலையில், மாணவர்கள் விடுதி இடப்பற்றாக்குறை உள்ளதால் மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்