தூசி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-09-17 16:26 GMT

ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை அருகே மார்க்கம்பட்டியில் செயல்படும் தனியார் கிரசர் தொழிற்சாலையில் இருந்து டிப்பர் லாரிகள் மூலம் ஜல்லிகற்கள் ஏற்றிச்செல்லப்படுகிறது. இந்த லாரிகள் செல்லும் போது ஜல்லிகற்கள் லாரிகளில் இருந்து சிதறி கீழே விழுவதுடன் தூசியும் பறக்கிறது. இதனால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்