பன்றிகள் தொல்லை

Update: 2023-03-05 11:47 GMT

நாகை நகர பகுதியில் உள்ள அய்யப்பன் கோவில் அருகே பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் அங்கும், இங்கும் ஓடித்திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் பன்றிகள் கழிவுநீரில் புரண்டு எழுந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்