மூடி இல்லாத ஆபத்தான கிணறு

Update: 2022-12-18 12:15 GMT

மூடி இல்லாத ஆபத்தான கிணறு

திருப்பூரை அடுத்த குன்னத்தூர் சுண்டக்காம்பாளையம் ஊமச்சிவளசில் உபயோகப்படுத்தாத கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணற்றை பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் உபயோகப்படுத்துவதில்லை. அருகிலேயே குடிநீர் தொட்டி அமைத்து அதில் இருந்து அனைத்துப் பகுதிக்கும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால் அந்த கிணற்றில் பாதிக்கு மேல் தண்ணீர் உள்ளது. அந்தக் கிணறு திறந்த நிலையிலேயே இருப்பதால் அப்பகுதியில் உள்ள ஆடு,மாடுகள் தவறி மேலே ஏறி விழும் அபாயம் உள்ளது. ஆகவே உபயோகப்படுத்தாத கிணற்றை மூடி போட்டு மூட வேண்டுமாய் இப்பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் ஊராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

முத்துக்குமார்,சுண்டக்காம்பாளையம்.

9842399536

மேலும் செய்திகள்