ராமநாதபுரம் மாவட்டம் கமுதி குண்டாற்று கண்மாயில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இந்த கண்மாயே இப்பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. தற்போது கண்மாயில் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் நீர்வளம் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. எனவே இந்த கருவேல மரங்களை அகற்றி நீர் வளங்களை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.