தேனி மாவட்டம் கோட்டூரில் உள்ள அரசு மாணவிகள் விடுதியின் நுழைவுவாயில் கேட் சேதம் அடைந்து உள்ளது. இதனால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. மேலும் நுழைவுவாயில் அருகே செடிகள் வளர்ந்து காணப்படுவதால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. எனவே மாணவிகளின் நலன்கருதி நுழைவுவாயில் கேட்டை சீரமைத்து, செடிகளை அகற்ற வேண்டும்.