பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கூத்தனூர் பகுதியில், சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள தெருக்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் குரங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதிகளில் வசிப்போா், சாலையில் சென்று வருவோா் அச்சப்படுகின்றனா். எனவே இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.