புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக ரத்த பரிசோதனை செய்யும் எந்திரம் பழுதாகி உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் காய்ச்சல், சளி உள்ள நோயாளிகள் அதிகம் வருகின்றனர். அதற்கு பரிசோதனை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.