சீரமைக்கப்படாத அரசு கட்டிடம்

Update: 2022-07-11 18:21 GMT

கரூர் மாவட்டம், தவுட்டுபாளையத்தில் இருந்து கட்டிப்பாளையம் செல்லும் சாலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆயத்த ஆடை தயாரிப்பதற்கு கட்டிடம் கட்டப்பட்டது. அதையொட்டி மகளிர் சுய உதவிக்குழு கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆயத்த ஆடை தயாரிப்பு கட்டிடம் மிகவும் பழுதடைந்து மழைக்காலங்களில் மழை நீர் ஒழுகி வருகிறது. இதனால் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கட்டிடம் சீரமைக்கப்படாமல் அப்படியே உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த ஆயத்த ஆடை தயாரிப்பு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்