பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா குரூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கொசுக்களின் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதி மக்கள் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.