இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 108 ஆம்புலன்சுகள்

Update: 2022-08-11 14:27 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சுகள் 17 இயக்கப்பட்டு வருகின்றனர். அதில் பெரம்பலூர் டவுன், கை.களத்தூர், செட்டிகுளம், காரை அரசு மருத்துவமனை, வேப்பூர் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் இயக்கப்படும் 108 ஆம்புலன்சுகள் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இரவு நேரத்தில் இயக்கப்படுவதில்லை. இதனால் இரவு நேரத்தில் கிராமப்புறங்களில் 108 ஆம்புலன்சு சேவை தாமதமாக கிடைக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 108 ஆம்புலன்சுகளுக்கு டிரைவர்-மருத்துவ உதவியாளர் நியமித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்