புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, அம்மாச்சத்திரம் பஞ்சாயத்தில் வெள்ளாளப்பட்டி என்னும் ஊர் உள்ளது. இந்த ஊரில் நார்த்தாமலை ரெயில்வே கேட்டிலிருந்து தட்டாம்பட்டி வரை சுமார் 2 கிலோ மீட்டர் வரை கிராமப்புற தேசிய நெடுஞ்சாலை புதிதாக அமைக்கப்பட்டது. அப்போது சாலையோரம் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், வெள்ளாளப்பட்டி என்னும் ஊர் வெள்ளாளவயல் என தவறாக எழுதப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூரில் இருந்து வரும் பொதுமக்கள் இந்த பெயர் பலகையை பார்த்து குழப்பம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.