புதர்மண்டி கிடக்கும் கழிப்பறை கட்டிடம்

Update: 2022-08-22 11:49 GMT
திருச்சி மாவட்டம், இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் அருகில் அய்யாளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள கழிப்பிட கட்டிடம் பராமரிப்பு இன்றியும், மிகவும் சிதிலமடைந்த நிலையிலும் உள்ளது. பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத அளவிற்கு புதர்மண்டியும், தண்ணீர் வசதி இன்றியும் கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கழிப்பிட வசதி இல்லாமல் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, பாழடைந்து புதர் மண்டி கிடக்கும் இந்த கழிப்பிடத்தை புதுப்பித்து தண்ணீர் வசதி செய்து கொடுத்தால் பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் பயனடைவார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

மயான வசதி