பெரம்பலூர் ரோவர் நூற்றாண்டு வளைவில் இருந்து எளம்பலூர் சாலைக்கு செல்லும் ரோவர் சாலையில் இருந்த குடிசைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் டாக்டர் தரேஸ்அகமது கலெக்டராக இருந்தபோது, அகற்றப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட்டது. ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி அருகே எளம்பலூர் சாலையுடன் இணைப்பு சாலை புதிதாக அமைக்கப்பட்டது. ரோவர் பிரதான சாலையில் தற்போது ஆரோக்கியசாமி நகர், டயானா நகர், பாரதியார் நகர், பாரதிதாசன் நகர், ஜெனிபர் நகர் உள்ளிட்ட குடியிருப்புகள் வளர்ந்த பகுதியாக உருவாகி விட்டது. இப்பகுதிமக்கள் நீண்டதூரம் சென்று காய்கறிகள் வாங்கிவரவேண்டியுள்ளது. ஆகவே ரோவர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் தற்போது புதர்மண்டிப்போய் உள்ளது. அப்பகுதியில் மாலை நேர காய்கறி-கனிகள் மார்க்கெட் அமைக்கவேண்டும். இதனால் மாலை நேரத்தில் அலுவலகம் சென்றுவருவோருக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.