ஆத்தூரை அடுத்துள்ள முக்காணி தாமிரபரணி ஆற்றின் குறுக்கே புதிய பாலமும், பழைய பாலமும் உள்ளது. திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் புதிய பாலத்திலும், தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வரும் வாகனங்கள் பழைய பாலத்திலும் வருகின்றன. கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது, பழைய பாலத்தின் ஓரத்தில் உள்ள இரும்பு தடுப்பு கம்பிகள் உடைந்து சிறிது தூரம் தடுப்பே இல்லாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். ஆகவே, அங்கு இரும்பு தடுப்புகள் அமைக்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.