மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு கிராமத்தில் பொது கழிவறைகள் அனைத்தும் பராமரிப்பின்றி சேதமாகி உள்ளன. தண்ணீர் சரியாக வருவதில்லை. மழை பெய்தால் நீரானது கட்டிடத்தின் உள்ளே புகுந்து விடுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சேதமடைந்த கழிப்பறைகளை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.