ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் பொதுமக்களை பயமுறுத்தி வருவதுடன் சாலையில் செல்லும் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்துக்களையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.