விருதுநகர் நகராட்சி அலுவலகம் பின் பகுதியில் அரசு சித்த மருத்துவ கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ கட்டிடத்திற்கு செல்ல எந்த ஒரு பெயர் பலகையோ, அறிவிப்பு பலகையோ இல்லை. இதனால் இங்கு வருவோர் சித்த மருத்துவ பிரிவிற்கு செல்ல சிரமம் அடைகின்றனர். எனவே சித்த மருத்துவ பிரிவிற்கு செல்ல அறிவிப்பு பலகை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.