கரூர் மாவட்டம் பாலத்துறை அருகே கொடுமுடி பகுதியில் இருந்து பரமத்தி வேலூர் செல்லும் சாலையின் ஓரத்தில் நெடுகிலும் பள்ளமாக உள்ளது. இதன் காரணமாக மழை நீர் குழிகளில் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் இந்த சாலை வழியாக ஏராளமான தனியார் மற்றும் அரசு பேருந்துகள், லாரிகள் ,கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தார் சாலை வழியாக இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்லும் போது அதனை ஒட்டி பெரிய வாகனங்கள் செல்லும்போது குழியில் மழை நீர் தேங்கி உள்ள இடத்தில் பெரிய வாகனங்களின் டயர் பட்டு இரு சக்கர வாகனம் ஓட்டுனர் மீது மழை நீர் பட்டு நனைந்து அவதிப்பட்டு செல்கின்றனர். எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலை ஓரத்தில் உள்ள குழிகளுக்கு மண் போட்டு நிரப்பி தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.