அறிவிப்பு பலகை கோரிக்கை

Update: 2022-08-20 13:21 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு முன்புறம் சாலையோரம் மின்சார மின்மாற்றி (டிரேன்ஸ்பார்மர்) ஒன்று உள்ளது. போலீஸ் நிலையத்திற்கு வருபவர்களும், அருகில் உள்ள ஓட்டல்களுக்கு சாப்பிடுவதற்காக செல்வோரும் தாங்கள் பயணிக்கும் கார், வேன் போன்ற வாகனங்களை மின்மாற்றியின் அருகில் சாலையோரம் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் போலீஸ் நிலையம் அமைந்துள்ள தெரு பகுதியில் உள்ள சாலையில் இருந்து பிரதான சாலைக்கு செல்லும்போது பிரதான சாலையில் வரும் வாகனங்கள் சரிவர தெரியாததால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய நிலை உள்ளது. அதுபோல பிரதான சாலையில் இருந்து இந்த தெரு பகுதிக்கு வாகனத்தை இயக்கும் போதும் அந்த வழியாக வரும் வாகனங்கள் தெரிவதில்லை. எனவே வாகன ஓட்டுகளின் நலனை கருத்தில் கொண்டு விபத்துகளை தடுக்கும் பொருட்டு குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு முன்புறமுள்ள மின்சார மின்மாற்றி அருகே எந்த ஒரு நபரும் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது. அவ்வாறு வாகனங்கள் அங்கு நிற்காத வகையில் அந்த இடத்தில் அறிவிப்பு பலகை வைத்து வாகனங்கள் நிறுத்தா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்