பெங்களூரு சேஷாத்திரிபுரம் நேரு சர்க்கிள் ரோட்டில் ஒரு நடைபாதை உள்ளது. அங்கு உள்ள அலுவலகங்களுக்கு வருபவர்கள் இருசக்கர வாகனங்களை நடைபாதையில் நிறுத்தி செல்கின்றனர். அந்த நடைபாதையில் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் நடைபாதையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.