ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி. பட்டினம் பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சாலையில் சுற்றித்திரிகின்றன. நாய்கள் துரத்துவதால் பெண்கள், குழந்தைகள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். நாய்க்கடியால் ஆடு, மாடுகள் காயமடைவதுடன் இறப்பு சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்களின் மீது நாய்கள் மோதுவதால் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.