உடன்குடி அரசு ஆஸ்பத்திரியில் 2 டாக்டர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இன்னும் 3 டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு டாக்டர் விடுமுறையில் சென்றால், ஒருவர் மட்டுமே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய நிலை உள்ளது. ஆகையால் காலிப்பணியிடங்களை நிரப்பி, 24 மணி நேரமும் ஆஸ்பத்திரி செயல்பட செய்தால் பொதுமக்கள் பெரிதும் பயன் அடைவர்.