பன்றிகள் தொல்லை

Update: 2022-08-18 13:14 GMT
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு, ஆக்கூர், திருக்கடையூர் பகுதிகளில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் அங்கும்,இங்கும் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், பன்றிகள் கழிவுநீரில் உருண்டு புரண்டு எழுந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிடுகின்றன. இதன்காரணமாக அந்த பகுதிகள் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்