மண்புழு உரம் தயாரிப்பு மையம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-18 10:16 GMT

தஞ்சையை அடுத்த மேலவெளி ஊராட்சி களிமேடு கிராமத்தில் தஞ்சை-பூதலூர் முதன்மைச்சாலையில் மண்புழு உரம் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து கிடக்கிறது. குறிப்பாபக மண்புழு உரம் தயாரிப்பு மையத்தை சுற்றி செடி,கொடிகள் வளர்ந்துள்ளன. மேலும், மேற்கூரையும் முழுவதும் சேதமடைந்து உள்ளது. இதனால் மண்புழு தயாரிப்பு மையம் செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது. இதன்காரணமாக அந்த பகுதி விவாசயிகள் மண்புழு உரம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பராமரிப்பில்லாமல் உள்ள மண்புழு உரம் தயாரிப்பு மையத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்