திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா துவரங்குறிச்சி இருந்து செந்துறை வரை கஞ்சநாயக்கன்பட்டி, கோட்டைப்பட்டி வழியாக மட்டுமே பஸ் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் செட்டியபட்டி தெற்கு எல்லைகாட்டுப்பட்டி, நல்லபிச்சம்பட்டி, தட்டாமடைபட்டி வழியாக செந்துறைக்கு பஸ் இதுநாள்வரை இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் 4 கிலோ மீட்டர் நடந்து வந்து பஸ்சில் செல்கின்றனர். முதியவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல இயலாமல் தவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.