மின்மோட்டார் பழுதை சரிசெய்ய வேண்டும்

Update: 2022-08-17 14:52 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் பேரளி கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகே மின்மோட்டார் மூலம் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் மின்மோட்டார் பழுது காரணமாக கடந்த சில நாட்களாக தண்ணீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மோட்டார் பழுதை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்