சென்னை புழுதிவாக்கம் மகேஸ்வரி அவென்யூ தெருவில் உள்ள பாதாள சாக்கடை மூடி சேதமடைந்த நிலையில் காணப்படுவது தொடர்பாக 'தினத்தந்தி' புகார்பெட்டியில் செய்தி வெளியானது. மாநகராட்சி அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால் சேதமடைந்த மூடி அகற்றப்பட்டு புதிய மூடி பொருத்தப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் மாநகராட்சி நிர்வாகத்தின் சீரிய நடவடிக்கைக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பாராட்டை தெரிவித்தனர்.