தொடர்வழிப்பறி சம்பவங்களால் அச்சம்

Update: 2022-08-17 12:57 GMT

மயிலம் அருகே செண்டூர் முதல் ஜக்காம்பேட்டை வரை விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் கணவர்களுடன் செல்லும் பெண்கள், தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து மோட்டார் சைக்கிளில் பின் தொடரும் மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து கழுத்தில் கிடக்கும் நகைகளை பறித்து செல்லும் சம்பவம் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் செல்ல பொதுமக்கள் அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே வழிப்பறி சம்பவங்களை தடுக்க காவல்துறை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணயில் ஈடுபட்டு குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்