கோவில்பட்டி- கடலையூர் சாலையில் பூரணி அம்மாள் காலனிக்கும், அரசு உணவு பாதுகாப்பு குடோனுக்கும் இடையே அமைந்துள்ள பயணிகள் நிழற்கூடம் போதிய பராமரிப்பு இல்லாமல் குப்பைக்கூளங்கள் நிறைந்து காணப்படுகிறது. எனவே, குப்பைகளை அகற்றி பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும். மேலும், அதன் அருகே உபயோகமற்ற நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துள்ள அடிபம்பையும் அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.