திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் திம்மராயசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஆறு ஒன்று உள்ளது. இந்த ஆற்று கரையோர பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்க சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.