சென்னை புழுதிவாக்கம் மகேஸ்வரி அவென்யூ தெருவில் உள்ள பாதாள சாக்கடை மூடி சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த பாதாள சாக்கடை தெருவின் ஓரத்தில் உள்ளதால் இரவு நேர பயணம் என்பது ஆபத்து நிறைந்ததாகவே இருக்கிறது. இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களும், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் இந்த சாலையை பயன்படுத்தி வருவதால் சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியை விரைவில் சரி செய்ய வேண்டும்.