உடன்குடி மெயின் பஜார் சந்திப்பில் இருந்து தாண்டவன்காடு செல்லும் சாலையை விரிவுப்படுத்தி புதுப்பிக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த சாலையில் கொட்டங்காடு அருகே புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வேகத்தடையில் இன்னும் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் இதை கவனிக்காமல் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே வேகத்தடை மீது வர்ணம் பூசுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?