கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் பஜார் உள்ளது. இங்கு ஏராளமான மக்கள் வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதேபோன்று சுற்றுலா பயணிகளும் ஊட்டிக்கு அதிகளவில சென்று திரும்புகின்றனர். ஆனால் பஜார் பகுதியில் ஏ.டி.எம். வசதி கிடையாது. கடந்த ஆண்டு ஏ.டி.எம். எந்திரம் பழுதானது. அதன்பின்னர் வேறு எந்திரம் பொருத்தப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் வங்கிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.