சுற்றுச்சுவர் கட்டித்தர கோரிக்கை

Update: 2022-08-14 15:58 GMT

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள மரவாபாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அரசு தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. அதனால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மரவாபாளையம் அரசு தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்