நெல்லை கொக்கிரகுளத்தில் செல்வ விநாயகர் கோவில் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் புதிதாக சாலை அமைக்கும்போது வேகத்தடை அகற்றப்பட்டுவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அதிவேகமாக வருகின்றனர். கோவிலின் அருகே ரேஷன் கடை, பள்ளிக்கூடம் அமைந்திருப்பதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ரோட்டை கடந்து செல்ல சிரமப்படுகிறார்கள். எனவே செல்வ விநாயகர் கோவிலின் அருகே ரோட்டின் இருபுறமும் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?