பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சி அரசலூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை ஓரத்தில் தனியார் விவசாய கிணறு உள்ளது. இந்த கிணற்றை சுற்றி தடுப்பு சுவர் இல்லாததால் அந்த வழியாக வரும் வாகனங்கள் நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சாலை ஓரத்தில் உள்ள கிணற்றை சுற்றி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.