ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்த நிழற்குடையின் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் வெயில், மழையில் நிற்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.