சாலை சந்திப்புகளில் பெயர் பலகை வைக்க வேண்டும்

Update: 2022-08-13 13:08 GMT

வாகனப் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், மக்களின் பயண நேரத்தை குறைக்கும் வகையிலும் திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் உள்ள அத்தானியிலிருந்து மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. உளுந்தங்குடி அருகே செல்லும்போது அந்தப் பகுதியில் இருந்து மண்ணச்சநல்லூர் நகரம், திருப்பைஞ்சீலி சிவன் கோவில், துறையூர், திருச்சி ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலை பிரிகிறது. வெளியூரிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் அவர்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு எந்த வழியில் செல்ல வேண்டும் என்று திசை தெரியாமல் அங்கு உள்ளவர்களிடம் கேட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த பகுதி ரவுண்டானா அருகே எந்த ஊர்களுக்கு எவ்வழியே செல்ல வேண்டும் என்ற ஊர் பெயர் பலகையை வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்