கொசுத்தொல்லை தீருமா?

Update: 2022-08-12 16:09 GMT

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கொசுத்தொல்லை அதிக அளவில் உள்ளது. ஒரு சில பகுதியில் சாலையோரத்தில் சாக்கடை தேங்கி காணப்படுகிறது. இந்த சாக்கடையில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகிறது. இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கொசுத்தொல்லை அதிக அளவில் உள்ளது. கொசுக்கள் கடித்த இடத்தில் அரிப்பு உள்ளிட்டவை ஏற்படுகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து முத்துப்பேட்டை பகுதியில் கொசு மருந்து தெளிக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்