கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை

Update: 2022-08-12 16:03 GMT

திருவெண்காடு பகுதியில் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. அதே போல் பல்வேறு கல்வி நிலையங்களும் உள்ளன. மேலும் பல்வேறு கோவிலும் அமைந்துள்ளது. இதனால் அந்த பகுதி எப்போதும் மக்கள் கூட்டத்துடன் காணப்படும். இந்த நிலையில் திருவெண்காடு பகுதியில் உள்ள சாலையில் ஏராளமான கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இவைகள் சாலையின் குறுக்கே செல்வதும், படுத்துகொள்வதுமாக உள்ளது. இங்குள்ள வணிக வளாகங்கள், உணவகங்கள், வீடுகளை சுற்றியும் கால்நடைகள் சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கால்நடைகள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே திருவெண்காடு பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்