நாய்கள் தொல்லை

Update: 2022-08-12 15:29 GMT

நாகை மாவட்டம் நாகூர் மெயின் சாலையில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். மேலும், வாகனங்களை விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்