வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-12 15:25 GMT

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் ரோவர் மேல்நிலைப்பள்ளி பின்புறம் உதவி கல்வி அலுவலர் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய அலுவலகச் சாலையில் இருந்த மழைநீர் வடிகால் வாய்க்கால் ஏறத்தாழ 200 மீட்டர் நீளத்திற்கு தனிநபர்களால் கிராவல் மண்ணை கொண்டு மூடி நிரவல் செய்யப்பட்டதால், மழைநீர் வடிகால் தூர்மண்டி போய் உள்ளது. இதனால் இப்பகுதியில் கட்டிடங்கள், வீடுகளில் இருந்து வெளியேறும் மழைநீர் துறைமங்கலம் ஏரியை சென்றடைவது தடைபட்டு வருகிறது. பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மழை நீர் வடிகால்வாய்க்காலை தூர்வாரி மழைநீர் வடிந்து செல்ல உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்