கரூர் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே மெயின் ரோட்டின் ஓரத்தில் உள்ள புளியமரத்தில் பெரிய அளவிலான துவாரம் ஏற்பட்டு, அந்த புளியமரம் எந்த நேரத்திலும் தார் சாலையில் விழும் நிலையில் உள்ளது. சாலையில் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த புளியமரம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.