காய்ந்த பனை மரங்கள்

Update: 2022-08-12 14:02 GMT

அரியலூர் மாவட்டம், திருமானூரில் இருந்து திருமழபாடி செல்லும் சாலையில் காரப்பாக்கம் மஞ்சமேடு கொள்ளிடம் கரையில் சாலையோரத்தில் 4-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் காய்ந்து உள்ளன. இச்சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிக அளவில் சென்று வருகின்றனர். இதனால் அவர்களுக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் வாகனங்கள் செல்லும்போது இந்த மரங்கள் விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்