நடைபாதை அமைக்கப்படுமா?

Update: 2022-08-12 13:55 GMT

ஊட்டி அருகே கேத்தியை அடுத்த சாந்தூர் தொரஜடா பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக நடைபாதை இல்லை. அங்கு செல்லும் ஒத்தையடி பாதை மழை பெய்யும் சமயத்தில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் வலுக்கி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அங்கு நடைபாதை அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்