பயன்பாட்டிற்கு வராத கழிவறை

Update: 2022-08-12 13:20 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 400 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவ-மாணவிகளின் பயன்பாட்டிற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கழிவறை கட்டப்பட்டது. ஆனால் இதுவரை பயன்பாட்டிற்கு திறந்து விடவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் சாலையை கடந்து வெட்டவெளியில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மாணவர்களின் நலன்கருதி புதிதாக கட்டபட்டுள்ள கழிவறையை திறந்து பயன்பாட்டிற்கு விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்