மரத்ைத அகற்ற வேண்டும்

Update: 2022-08-12 13:02 GMT

தக்கலையில் இருந்து பத்மநாபபுரம் செல்லும் சாலையில் வள்ளியாற்று பாலம் அருகில் பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. பத்மநாபபுரம் கோட்டை சுவரையொட்டி மேடான பகுதியில் நிற்கும் இந்த மரத்தின் வேர்கள் எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிற்கிறது. இதன் கீழ்பகுதி பள்ளமாக உள்ளதால் பேரிடர் காலங்களில் மரம் சாய்ந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் நிற்கும் இந்த மரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகமதுராபி,பத்மநாபபுரம், 

மேலும் செய்திகள்