கால்நடை மருத்துவமனை வேண்டும்

Update: 2022-08-12 12:45 GMT

புதுக்கோட்டை மாவட்டம், 9ஏ நத்தம் பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட பாலன் நகர் கிழக்கு, மேற்கு, கருவேப்பிலான் ரெயில்வே கேட், மருதுபாண்டியர் நகர், ஐ.டி.ஐ.காலனி, விவேகானந்தபுரம், அபிராமி நகர், அடப்பன்கார சத்திரம், பழனியப்பா நகர், ராசாவாயல், குன்னவயல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் அவர்கள் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால், 5 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள திருக்கோகர்ணம் அரசு கால்நடை மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே 9ஏ நத்தம் பண்ணை பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்