மந்தமான நடைமேடை மேம்பால பணிகள்

Update: 2022-08-12 12:25 GMT

ஆறுமுகநேரி ரெயில் நிலையத்துக்கு தினமும் காலை, மாலையிலும் 7 ரெயில்கள் வந்து செல்கின்றன. 3 முறை கிராசிங் ஏற்படுகிறது. இங்கு நடைமேடை மேம்பால பணிகளுக்காக கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அஸ்திவாரம் போடப்பட்டது. அதன் பின்னர் அதற்கான இரும்பு தளவாட பொருட்களும் வந்து பல மாதங்களாக ஆகிவிட்டது. ஆனால் வேலைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. ரெயில் கிராசிங் சமயத்தில் 2-வது நடைமேடைக்கு வந்திறங்கும் பயணிகள் 500 மீட்டர் தூரம் நடந்து சென்று தான் முதலாவது நடைமேடைக்கு வர முடியும். இதனால் பயணிகள் குறிப்பாக வயதான முதியவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, நடைமேடை மேம்பால பணிகளை விரைவாக முடிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்